பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஆசைப் பத்து செடி.ஆர் ஆக்கைத் திறம்அற விசிச் சிவபுர நகர்புக்குத் கடிஆர் சோதி கண்டு கொண்டுஎன் கண் இணை களிகூரப் படிதான் இல்லாப் பரம்பரனேஉன் பழ அடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே வெம்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நான்ஒர் துணைகாணேன் பஞ்சுனர் அடியாள் பாகத்து ஒருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே (9) (10)