பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அருட் பத்து மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவாள் அரவம் கங்கைநீர் தங்குசெம் சடையாய் தெருளும்நான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே (9) திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தம் மேவியகீர் இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடைய எம்பிரான் என்றுஎன்று அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலைகடல் அதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்று அருளாயே (10) o