பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பிடித்த பத்து பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கி உலப்பு:இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் ாங்கு எழுந்தருளுவது இனியே (9) புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்நெடும் கோயிலாப் புகுந்துஎன் என்புஎலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசுஇலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்குஆம் தொடக்கு எலாம் அறுத்தநல் சோதி இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே (10) .722