பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்திரண்டாவது சென்னிப்பத்து சிவ விளைவு திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் மூவராலும் அறிஒணா முதல் ஆய ஆனந்த மூர்த்தியான் யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிஒணா மலர்ச் சோதியான் தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம் சென்னி மன்னிச்சுடருமே அட்ட மூர்த்தி அழகன் இன்.அமுது ஆயஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச் சிவலோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கை யாளைஒர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 76Յ (1) (2)