பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்து மூன்றாவது திருவார்த்தை அறிவித்து அன்புறுத்தல் (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் மாதுஇவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதுஇல் பரம்கருணை அடியார் குலாவும் நீதிகுணம் ஆகநல்கும் போதுஅலர் சோலைப் பெருந்துறைஎம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார்எம்பிரான் ஆவாரே (1) மால் அயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்குஅருள் செய்தஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நல்நெறி காட்டி நலம்திகழும் கோல மணிஅணி மாடம்நீடு குலாவும் இடவை மடநல்லாட்குச் சீலம் மிகக்கருணை அளிக்கும் திறம் அறிவார்எம்பிரான் ஆவாரே (2) 776