பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. திருவெண்பா செய்த பிழை அறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பு:அறியேன்-வையத்து இருந்துஉறையுள் வேல்மடுத்துஎன் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான் (3) முன்னை வினை இரண்டும் வேர்.அறுத்து முன்நின்றான் பின்னைப் பிறப்பு:அறுக்கும் பேராளன்-தென்னன் பெருந்துறையில் மேய பெரும்கருணை யாளன் வரும்துயரம் தீர்க்கும் மருந்து (4) அறையோ அறிவார்க்கு அனைத்துஉலகும் ஈன்ற மறையோனும் மாலும் மால்கொள்ளும்-இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது இருந்துஉறையும் என்நெஞ்சத்து இன்று (5) 810