பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. திருவெண்பா பித்துஎன்னை ஏற்றும் பிறப்புஅறுக்கும் பேச்சுஅரிதுஆம் மத்தமே ஆக்கும்வந்து என்மனத்தை-அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேர்அருளால் நோக்கும் மருந்துஇறவாப் பேரின்பம் வந்து (6) வாரா வழிஅருளி வந்துஎனக்கு மாறுஇன்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீர்.ஆர் திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி (7) யாவர்க்கும் மேல்.ஆம் அளவுஇலாச் சீர்உடையான் யாவர்க்கும் கீழ்ஆம் அடியேனை-யாவரும் பெற்றுஅறியா இன்பத்துள் வைத்தாய்க்குஎன் எம்பெருமான் மற்றுஅறியேன் செய்யும் வகை (8) 812