பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே பாவனை ஆய கருத்தினில் வந்த பாரஅமுது ஆகாதே அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே ஆதி முதல்பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே செம்துவர் வாய்மட வார்இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே சேல்அன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவது ஆகாதே என்னுடைய நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே (3)