பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தொன்றாவது அச்சோப்பதிகம் அனுபவவழி அறியாமை (தில்லை) கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட அத்தன்எனக்கு அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (1) நெறிஅல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருஅருளே சேரும்வண்ணம் குறிஒன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தைஎனக்கு அறியும்வண்ணம் அருளியஆறு ஆர்பெறுவார் அச்சோவே (2) 854.