பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது திருப்பொற் சுண்ணம் ஆனந்த மனோலயம் (தில்லை) (அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்) முத்துநல் தாமம் பூமாலை தூக்கி முளைக்குடம் து பம் நல்தீபம் வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின் சித்தியும் கெளரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்மின் அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே (1) பூஇயல் வார்சடை எம்பிராற்குப் பொன்திருச் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவின் வடுவகிர் அன்னகண்ணிர் வம்மின்கள் வந்து உடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம் நிலாமே குனிமின் தொழுமின் எம்கோன் எம்.கூத்தன் தேவியும் தானும் வந்து எம்மை ஆளச் செம்பொன் செய்சுண்ணம் இடித்தும் நாமே (2) 386