பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவாசகம் - சில சிந்தனைகள் பொருளை உணர்ந்து சொல்பவர்கள்கூட, அனுபவத்தில் இருந்து மீண்ட பின்பு, தான் என்ற நினைவு திரும்பிய உடன், ஏற்கனவே எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது என்று நினைத்துத் தம்மையும் அறியாமல் அகங்காரம் கொள்ளுதலும் கூடும். அன்றியும் இவர்களுடைய வளர்ச்சியைக் கண்டு பலரும் இவர் பெரியவர் என்று கருதிப் புகழ்ந்து எத்தத் தொடங்கியவுடன் அந்த அகங்காரம் மேலும் வளரக்கூடும். இவை இரண்டு நிலைகளிலும் அவ் அகங்காரத்தைப் போக்கப் பணிவு தேவையாதலால் பணிந்து செல்வர் என்று கூறினார் என்று கொள்ளுதல் சிறப்புடைத்தாம்.