பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவாசகம் - சில சிந்தனைகள் கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் வேலம் புத்துர் விட்டே றருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் தர்ப்பணம் அதனிற் சாந்தம் புத்துர் விற்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று ஈண்டு கனக மிசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தன னாகி ஆண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவக னாகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் பூவன மதனிற் பொலிந்திருந் தருளித் துவன மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் 30 35 40 45 50