132 திருவாசகம் - சில சிந்தனைகள் சேவக னாகித் திண்சிலை யேந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயா றதனிற் சைவ னாகியும் துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்ப னாகியும் கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் புறம்பய மதனில் அறம்பல அருளியும் குற்றாலுத்துக் குறியா யிருந்தும் அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போலவந் தருளி எவ்வெவர் தன்மையும் தன்வயின் படுத்துத் தானே யாகிய தயாபரன் எம்மிறை சந்திர தீபத்துச் சாத்திர னாகி அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன் அந்தமில் பெருமை யருளுடை அண்ணல் எந்தமை யாண்ட பரிசது பகரின் ஆற்று துவுடை ஆழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனந் தன்னை ஒருங்குட னறுக்கும் ஆனந் தம்மே ஆற அருளியும் மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் 85 90 95 100 105
பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/141
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை