பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருவாசகம் - சில சிந்தனைகள் மார்க்கம் பெறுகிறார். மலை ஏறுவதற்கு முன்னர், திண்ணனாராக, வந்தவர் மலையேறிக் குடுமித்தேவரைக் கண்டபின்னர்க் கண்ணப்பராக மாறிவிட்டதைப்போல, அமைச்சராகப் பரிவாரங்களுடன் வந்த ஒருவர், திருப்பெருந்துறையில் குருநாதரைக் கண்ட பிறகு அடிகளாராக மாறிவிடுகிறார். எனவே, அடிகளாருடைய ஆன்ம யாத்திரையில் மடைமாற்றம் நடைபெறுகின்ற பகுதியை ஒரளவு விரித்துக் கூறுவது கீர்த்தித் திருஅகவல் என்க. @ ó @