பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு அண்டப்பகுதி அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. இல்நுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பே ரூழியும் நீக்கமு நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்குங் கடவுள் காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள் திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன் நாடொறும் அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் திண்டிறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று எனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று 10 15 20 25