பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி 165 புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க அவன்னனை ஆட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க அவளும் தானும் உடனே காண்க பரமா னந்தப் பழங்கட லதுவே கருமா முகிலின் தோன்றித் திருவார் பெருந்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய ஐம்புலப் பந்தனை வாளரவு இரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழில் தோன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியிற் கோப மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் பூப்புரை அங்சலி காந்தள் காட்ட எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரையுறக் கேதக் குட்டங் கையற ஒதுங்கி - இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் பாய்ந்தெழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்துஎம் பந்தமாக் கரைபொருது அலைத்துஇடித்து ஊழுழ் ஓங்கிய நங்கள் . இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து உருவ அருள்நீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி 65 70 75 80 85 90