பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி 167 மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இந்தத் திரத்திற் காண்டும்என் றிருந்தோர்க்கு அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும் முனிவுஅற நோக்கி நனிவரக் கெளவி ஆனெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வர்ணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த வொளித்தும் ஒன்றுண்டு இல்லை யென்றறி வொளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தர்ள்தளை யிடுமின் - சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமி னென்றவர் பற்றுமுற் றொளித்தும் தன்னே ரில்லோன் தானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி அறைகூவி ஆட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் உளையா அன்புளின் புருக வோலமிட்டு அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தேங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும் கடைக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 125 f30 135 140 145 150 155