பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 175 வரன்முறை உண்டு என்பதே இத்தொடரின் பொருள் ஆகும். ஒன்றனுக்கொன்று என்றதால் ஒரு உண்டையை அடுத்து அதைச் சுற்றியுள்ள ஏதோ ஒரு கோணத்தில் மற்றொரு உண்டை விரிந்தாலும் இவை இரண்டின் இடையே உள்ள கோணம் மாறாமல் இருக்கும் அழகை நின்று எழில்’ என்ற சொற்களால் குறிக்கின்றார். இறைவனின் பெருமையை அறிவித்தற்கு அடிகளார் இவற்றைக் கூறினாரேனும், 19 في நூற்றாண்டில் அறியப்பட்ட பல விஞ்ஞானப் புதுமைகள் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ளன. அண்டம், உண்டை, பிறக்கம், விரிந்தன, துன்அணு ஆகிய சொற்களே இந்நூற்றாண்டின் விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புக்களை அறிவிக்கும் சொற்கள் ஆகும். அடிகளார் காலத்தில் அணு என்ற சொல் பல பொருள்களில் வழங்கிய ஒரு சொல்லாகும். கட்புலனாகும் சிறு துகள், கருத்தால்மட்டும் காணக்கூடிய நுண்பொருள் என்பவையும் அணு என்ற சொல்லாலேயே அந்நாளில் குறிக்கப்பெற்றன. இதில் வியப்பு என்னவென்றால் 19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம் கூறும் அணு (atom) என்ற சொல் எந்தப் பொருளில் வழங்குகிறதோ அந்தப் பொருளும் அடிகளார் கூறும் அணு என்றசொல்லுக்கு உண்டு. இன்றுகூட அணுவை யாரும் கண்ணால் கண்டதில்லை. மிகச் சக்திவாய்ந்த மின்னியல் பெருக்காடி (Electron Microscope)யின் மூலம்கூட அணுவைப் பார்க்க முடியாது. அப்படியானால் சாதாரண் மனிதர்கள், அணுவின் வடிவை எவ்வாறு கருத்தில் கொள்ளமுடியும். அடிகளார் காட்டிய துன்னணுப் புரைய’ என்ற உவமை அணுவைப்பற்றி அறிந்து கொள்ளப் பேருதவி புரிகின்றதன்றோ! . ༤བབབ་བབུ༠༠༠༠༠༠༠༠༠་ - - ...தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய