பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆண்டுகள் தோறும் அடைந்தவக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்துங் கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின. ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரத மேபர் மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவ தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து 30 35 40 45 50 55