பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் 225 உலோகா யதனெனும் ஒண்திறல் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும் தப்பா மேதாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகது போலத் 60 தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் இடையறா அன்பிற் பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65 கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந்து அனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நானது வொழிந்து நாடவர் பழித்துரை பூனது வாகக் கோணுத லின்றிச் 70 சதுரிழந் தறிமால் கொண்டு சாரும். கதியது பரமா அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது அருபரத் தொருவன் அவனியில் வந்து 75 குருபர னாகி அருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை அறியா நிழலது போல முன்பின் ஆகி முனியாது அத்திசை என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80 அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதவென் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதய மலரக் கண்களி கூர நுண்துளி யரும்பச் 85