பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 349 நம்பிக்கைக்கு நீரூற்றி, உரமிட்டு வளர்கின்ற பணியை புரிகின்றன. இந்த அகவல்கள். இது அகவல்களின் இரண்டாவது வெற்றியாகும். தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகியும், இடையூறுகள் வருகின்றனவே! என் செய்வது என்று நம்பிக்கை தளரும்பொழுது, ஒன்றுமே செய்ய வேண்டாம், முழுவதுமாக உன்னை அவனிடம் ஒப்படைத்து விடுக; போற்றி போற்றி என்று அவன் புகழைப் பாடுக. இதன் பயனாக எதனையும் பெறலாம் என்ற நம்பிக்கையை முழுவதுமாக வளர்த்து, ஆன்ம யாத்திரைக்கு இவனைத் தயார்செய்து திருவாசகத்துள் நுழையக்கூடிய நம்பிக்கையையும், தகுதியையும் தருவதே நான்கு அகவல்களின் பணியாகும். இதுவே அகவல்களின் மூன்றாவது வெற்றியாகும். ওঁ ওঁ ওঁb