பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவாசகம் - சில சிந்தனைகள் வேண்டும். ஆழ்ந்து சிந்தித்தால், இது இன்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிற வைப்புமுறை என்பதை அறிய முடியும். இனி மனிதக் குரங்கில் தொடங்கி மனிதனோடு இந்த வளர்ச்சிமுறை முடிந்துவிட்டதாக மேல்நாட்டார் கருதினர். எனினும், அடிகளாரின் விஞ்ஞானப் பார்வையில், ஒர் ஆன்மாவுக்கு மனிதப்பிறவிக்கு அடுத்துள்ள சில பிறவிகளும் உண்டு என்பதைக் காணமுடிகிறது. சராசரி மனித உடம்போடு தோன்றுகிற பலர் வல்ல அசுரராக வாழ்கிறார்கள் என்பதை இன்றும் காண்கிறோம். மாபெரும் வன்மையைத் தவ பலத்தால் பெற்றும், புலனடக்கம் இல்லாத காரணத்தால் அழிந்த இராவணனைப் போன்றவர்கள் இன்றும் உண்டு. மும்மலங்களில் முக்கியமானதாகிய ஆணவமலம் விஸ்வரூபம் எடுப்பதால் இரணியன் ஆகவும், சூரபன்மனாகவும் வாழுகின்ற மனிதர்களையும் காணமுடிகிறது. இவர்களையெல்லாம் உள்ளடக்கி வல்அசுரர்களாய்க் கண்டார் அடிகளார். அதேபோல மனிதர்களாகப் பிறந்த சிலர் புலனடக்கத்தோடும் சீவகாருண்ய உணர்வோடும் மனிதாபிமான உணர்வோடும் முனிவர்களைப்போல வாழ்வதை இன்றும் காண்கிறோம். பொறிபுலன்களை அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்தி உயரிய தியானத்தில் ஈடுபடும் ஒருவனுக்கு அட்டமா சித்திகளும் சித்திக்கின்றன. இத்தனை ஆற்றல்களைப் பெற்றிருந்தும் இந்த மாமுனிவர்கள் சாதாரண மக்களைப் போல மக்களிடையே உலவி வருவதை இன்றும் காணலாம். இதை உணர்த்த அடிகளார் மனிதராய் என்றவர் வல்அசுரராகி என்றும் முனிவராய் என்றும் கூறினார். இந்தப் பூத உடலின் உள்ளே வாழும் உயிர்க்குச் சூக்கும உடல் என்ற ஒன்றும் உண்டு. மனித வடிவு' இருப்பினும் அசுர குணம் படைத்தவர்களின் உடல் அழிகிறபோது, திரும்ப அந்த உயிர் மற்றொரு பிறப்பு எடுக்கும்வரை