பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 91


தகுவனே என் தன்மையே
     எந்தாய் அந்தோ தரியேனே 60

நகுவேன்-சிரிப்பேன். பண்டு-உடல் வனப்பிலும் இளமையிலும் ஆசைவைத்த அன்றைக்கு. புகுவேன்-சேர்வேன்.

திருப்பெருந்துறையில் அடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கூட்டத்தில் இருந்துதான் குருவின் தோள்களைக் காணவும் அதனால் மகிழ்ச்சிப் பூரிப்பு ஏற்படவும் ஒரு சூழ்நிலை உருவாயிற்று.

இப்போது தோள்களைக் காணும் வாய்ப்பு இல்லை. அந்த அடியாரிடையே சொல்லலாம் என்றால் அவர்களும் இப்போது இல்லை.

அந்த அடியார் கூட்டம் இல்லாவிடினும் ஒருவேளை உள்ளம் உருகும் அன்பு (நெகும் அன்பு) இருந்திருப்பின் அவனைக் காண முடிந்திருக்கும். இரண்டும் இல்வழி இறைவனால் ஆளப்படும் தகுதி தம்பால் உண்டோ என்று ஐயுறுகின்றார்.

காருணியத்து இரங்கல்

65.

தரிக்கிலேன் காய வாழ்க்கை
    சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
     விடலையே போற்றி ஒப்பு இல்
ஒருத்தனே போற்றி உம்பர்
     தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
     நின்மலா போற்றி போற்றி 61

வானம்-பரவெளி. ஒப்பில் ஒருத்தன்-ஒப்பில்லாமையால் தான் ஒருவனேயானவன். விடலை-இளையோன்.