84 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2
59.
மான் நேர் நோக்கி உமையாள்
பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின்
தெளிவே சிவனே தென் தில்லைக்
கோனே உன்தன் திருக்குறிப்புக்
கூடுவார் நின் கழல் கூட
ஊன்ஆர் புழுக்கூடு இது காத்து இங்கு
இருப்பது ஆனேன் உடையானே 55
இப்பாடலின் முதலடி திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும். அந்த நிலையில் குருமட்டும் இருந்தாரே தவிரப் பிறர் காணும்படி வேறு யாரும் அங்கில்லை. அடிகளார் முதலில் குருவைப் பார்த்தாரேனும் சில விநாடிகளில் உமை ஒரு பாகனைக் கண்டுவிட்டார் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். 'மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட தேனே’ என்ற அடி, மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.
60. உடையானே நின்தனை உள்கி
உள்ளம் உருகும் பெரும் காதல்
உடையார் உடையாய் நின் பாதம்
சேரக் கண்டு இங்கு ஊர் நாயின்
கடைஆனேன் நெஞ்சு உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியாதேன் முடைஆர்.
புழுக்கூடு இது தூத்து இங்கு
இருப்பதுஆக முடித்தாயே 56
முடை-நாற்றம்.
‘உன்னை நினைத்த மாத்திரத்தில் ஊனும் உயிரும் உருகும் அடியார்கள் பலரை உன் அடிமைகளாகக் கொண்டுள்ளாய். புழுக்கள் நிறைந்த இவ்வுடலோடு கூடிய நான், நின்பால் அன்பு செய்யவில்லை; உருகவில்லை. அதனால்தான் போலும் இவ்வுலகிலேயே நான் இருக்கு மாறு செய்துவிட்டாய்” என்கிறார்.