பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்படி, தேவியும் தானுமாக உள்ள பெருமான் தன் நிலையிலிருந்து இறங்கிக் குதிரைச் சேவகன் வடிவை ஏற்றுக்கொண்டு, மன்னனாகிய வரகுண பாண்டியனின் எதிரே வந்து அவன் சீவ போதத்தை உண்டான். குதிரைச் சேவகனாக வந்த வரலாற்றை அறிவதற்கு முன்னர், அவன் திருவடியை அடைவதுதான் உயிரின் குறிக்கோள் என்ற முடிவை தேற்றம்) அறியாதிருந்தவர்கள் இப்பொழுது இவ்வரலாற்றை அறிந்த பிறகு அவன் திருவருளைப் பெற முந்துவார்களாக! ওঁ ওঁ ওঁb