பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 475 குதிரை வாங்கச்சென்ற அமைச்சர், திருப்பெருந் துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி காரணமாக, மணிவாசகராக மாறி, வளர்ச்சி அடைகின்றார். இந்த வளர்ச்சியை இந்த மூன்று பாடல்களும் வரிசைப்படுத்திக் காட்டுகின்றன. கசிந்து உருகும் நிலை ஏற்பட்டுவிட்டால் உலகத்தையே ஒரு பொருட்டாக மதிக்காமல் அனைத்தையும் துறக்கச் சித்தமாக உள்ளதாகக் கூறுகிறார். இந்த வளர்ச்சி நிலையை மலை முகட்டில் ஏறிக் கூறுபவர்போல, அனைவரையும் அழைத்துக் கூறுகின்றார். இத்தகைய இந்த மூன்று பாடல்களைப் புலம்பல் என்று அழைப்பது பரிதாபத்திற்குரியதாகும்.