பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருவாசகம் சில சிந்தனைகள்-5 'இதற்குமுன்னர்க் கனவிலும் &#ffffffff" இயலாத இறையனுபவங்கள் இப்பொழுது விரிவாகச் சித்தத்தில் தோன்றுகின்றன. 'தன்னுடைய காதலனிடத்து ஒரு பெண்ணுக்கு முழுமையாகத் தோன்றும் மையல் எப்படி அவளை ஆட்கொள்ளுமோ அதுபோல இறைவனிடத்து எனக்குள்ள மையல் முழுவதுமாக வளர்ந்து என்னை ஆட்கொண்டுவிட்டது. ‘என் எதிரேயுள்ள இப்பொருள் விண்ணவரும் அறிய முடியாத விழுப்பொருளாகும். எல்லையில்லாத எண்குணங்களைத் தன் வடிவாகக் கொண்டுள்ள இறைவன் என் எதிரே தோன்றினமையின், மேலேகூறியவை என்மாட்டும் பரவின' என்றபடி. 642. சங்கு திரண்டு முரன்று எழும் ஒசை தழைப்பன ஆகாதே சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் - அத்தனை ஆகாதே செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே எங்கும் நிறைந்து அமுது ஊறு பரம் சுடர் எய்துவது ஆகாதே ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப் பெறிலே 8