பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_199 சுற்றம் முதலியவர்களுடன் சேர்ந்து உண்ணல், வசித்தல் ஆகியவற்றால் தோன்றும் போகங்களை அனுபவிப்பதற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்று செல்வம் ஆகும். எனவே, அடிகளார் இந்தப் போகத்தைப் பற்றிப் பேசவரும்போது 'மாடு” என்ற சொல்லில் தொடங்குகிறார். மாடு என்பது பொருட் செல்வமாகும். அது நிறையவே, சுற்றம் தேடிக்கொண்டுவரும். இவை இரண்டும் நிறைய பல்வேறு வகைப்பட்ட போகங்களை இந்த உடல் அனுபவிக்கின்றது. இந்த அனுபவத்திற்குச் செல்வம் தேவைப்படுகிறது. ஆதலால்தான் அடிகளார் மாடு என்று தொடங்கினார். இந்தச் செல்வம் இல்லாமலும் அனுபவிக்கப்படும் போகம் மகளிர்பால் பெறுகின்ற போகமாகும். இப்போகங்கள் அனைத்துமே உடல்பற்றி வருகின்ற போகங்களாகும். இவற்றிலேயே கிடந்து ஊறித் திளைக்கின்ற நமக்கு இதனினும் வேறுபட்ட மற்றோர் போகம் உண்டு என்பதை நினைக்கக்கூட நேரமில்லை. முதல் இரண்டு அடிகளிற் கூறிய போகங்களை அனுபவித்த அடிகளார், இடையிலேயே குருநாதர் அருளால் வீட்டின்பத்தை அனுபவிக்கும் பேற்றைப் பெற்றார். அதனையே பாடலின் பின்னிரண்டு அடிகளிற் கூறுகின்றார். 576ஆம் பாடலில் சிந்திக்கவேண்டிய ஒரு பகுதி இரண்டாம் அடியில் பேசப்பெற்றுள்ளது. ஒசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்' என்பது ஒரு பகுதியாகும். மிகப் பழங்காலத் தொடங்கி இன்றுவரை நம்முடைய சமுதாயத்தில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிற்கூட ஒரு நம்பிக்கை இருந்துவருகிறது. மந்திரங்களை உச்சாடனம் செய்வதன் மூலம் உயர்நிலையை அடைய முடியும்