பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lളിക്കു തേഖiുങ്ങp_8_378 செயற்கரும் செயல்களைச் செய்து, மக்கள் கவனத்தை ஈர்த்துத் திருக்கோயில்களுக்குச் சென்று பாடிச் சமயத்தை வளர்க்கும் முறை ஒன்று. நாவரசர் பெருமான் காரணமாக மகேந்திர வர்மன் தான் பின்பற்றியிருந்த சமயத்தைவிட்டு சைவத்திற்கு மாறியதை உலகறிய திருச்சிராப்பள்ளி மலையின் அடிவாரத்தில் உள்ள குகைக்கோயிலில் குறித்தான். அதேபோலப் பாண்டியன் நெடுமாறனும் திருஞானசம்பந்தர் காரணமாகச் சைவ சமயத்திற்கு மாறியதால், ՃՃ)ՅF6)յ சமயம்பற்றிய புத்துணர்ச்சியும் உத்வேகமும் தோன்றலாயின. மூவர் முதலிகள் காலத்தில் பல்லவர்களும் பாண்டியரும் இருந்தார்களேதவிரப் பெயர் சொல்லத்தக்க சோழர் யாரும் இல்லை. அப்படி இருந்தும் மூவர் முதலிகளின் செல்வாக்கால் சைவம் தழைத்தது. அடிகளார் தோன்றிய ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நிலை மாறிவிட்டது. எனவே, மக்கள் மனத்தில் இறையுணர்வைத் தோற்றுவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. இந்நிலையில் அடிகளாரைப் பொறுத்தமட்டில் இரண்டு வழிகள் தென்படலாயின. மூவர் முதலிகளைப்போல ஊர் ஊராகச் சென்று திருக்கோயிலில் மக்களைக் கூட்டி இறைவன் புகழைப் பாடுவது ஒரு வகை. அப்படிப் பாடுகின்றவர்கள் இறையருளால் மாபெரும் ஆற்றல் பெற்றவர்களாய் இருந்தனர். அடிகளாருடைய வரலாற்றில் மக்களை ஈர்க்கும் முறையில் எந்த ஒரு செயற்கரும் செயலையும் செய்ததாகத் தெரியவில்லை. திருவாசகத்திலும் அதற்குரிய சான்றுகள் எதுவும் இல்லை. நரி பரியாகியதும் வைகையில் வெள்ளம் வந்ததும், சொக்கனுடைய திருவிளையாடல்களாகக் கருதப்பெற்றனவேதவிர அடிகளார். இவற்றில் நேரடித் தொடர்பு கொண்டவர் என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இம்மட்டோடில்லாமல் ஒர் அரசரின் தலைமை அமைச்சராக இருந்த ஒருவர் அதனைத் துறந்து