பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிக வைப்புமுறை-9-429 ஆர்வம் இன்னும் வளர்ந்து பெருக (கூர) நீ அருள் செய்ய வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனையாகும்’ என்கிறார். இங்குக் கூறப்பெற்ற கருத்து சரியானதே என்பதை அடுத்த பாடலில் வரும் அடியார் சிலர் அருள் பெற்றார் ஆர்வங்கூர' (486) என்ற தொடரால் விளக்குகின்றார். 'அருள் பெற்றவர்’ என்பதால் அவர்கள் முன்னரே அருள் பெற்றுவிட்டார்கள் என்பது தெரிகிறது. எப்படி அருளைப் பெற்றார்கள் இவர்கள் என்ற வினாவிற்கு ஆர்வங் கூர்தலினால் (ஆர்வங் கூர) இவர்கள் அருளைப் பெற்றார்கள் என்று தெரிகிறது. எனவே, இத்தலைப்பின்கீழ் நம் முறைவைப்பில் ஆசைப்பத்தின் பின்னர்ப் பிரார்த்தனைப் பத்து இடம் பெற்றுள்ளது. பிரார்த்தனைப் பத்தில் ஆர்வங்கூர அருளவேண்டும் என்று பாடினார் அல்லவா? ஆர்வங் கூர்ந்தால் அருள் பெறமுடியும் என்பதையும் பிரார்த்தனைப் பத்தின் இரண்டாம் பாடலில் கூறினாரல்லவா? ஆர்வங் கூர்ந்து அருளைப் பெற்றால் அதன் பயனாக என்ன விளையும் என்பதை எண்ணப் பதிகத்தில் விரித்துப் பேசுகிறார் அடிகளார். திருவாசகம் முழுவதையும் படிக்காமல் எண்ணப் பத்து ஒன்றைமட்டும் படித்தால் சில ஐயங்கள் தோன்றும். 'பிறப்பு அற வேண்டும் 'பத்திமையும் பெறவேண்டும்’ (599) என்றால், இது இறைநெறியில் செல்லும் தொடக்கப் படியில் உள்ளவர்கள் வேண்டுவதுபோல அமைந்திருப் பதைக் காணலாம். முதற்பாடலில் பத்திமை பெறவேண்டும் என்று பாடியவர், இரண்டாவது பாடலிலேயே பரம்பொருள் குருநாதராக எழுந்தருளி வந்து தம்மைக்