பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையல் என்னைவிடப் பல்லாண்டுகள் மூத்தவர்களாயினும், 1932ஆம் ஆண்டு முதல் என்னோடு நெருங்கிப் பழகி, என்னை மகனாகவே பாவித்து, தேவை ஏற்பட்டபோதெல்லாம் என் வாழ்க்கையைத் திசை திருப்பியவர்கள் இருவர். மனத்திற்பட்டதை மேடையில் அஞ்சாமல் கூற ஊக்கம் தந்தவரும், திருவாசகத்திற்கு என்போக்கில் உரைகாணவேண்டும் என்று என்னைத் தூண்டியவரும் தமிழ்த் தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்களே ஆவார். ஆன்மீகத் துறையில் என்னை உந்திச் செலுத்தி, தம் பூத உடலை நீத்த பிறகும், இன்றும் அத் துறையில் என்னை வழிநடத்திச் செல்பவர் பல்கலைச் செல்வர் டாக்டர். தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களே ஆவார். இந்த இரு மகான்களுக்கும் மிக்க பணிவன்புடன் இந் நூலைப் படையல் செய்து அவர்களின் ஆசியை வேண்டி இறைஞ்சுகின்றேன் அ. ச. ஞானசம்பந்தன் -