பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இந்த நிறைவுப் பகுதியை என் வாய்மொழி மூலம் கேட்டு எழுதியவர்கள் யாழ்ப்பாணம் திரு. ச. மார்க்கண்டு அவர்களும், இந்திய இரயில்வேயில் மின்னியல் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. C. P. கெளரிசங்கர், அவர்களும் ஆவர். எழுதி முடித்த பின்னர் ஒவ்வொரு வரியாகப் பார்த்து தடை விடைகளை எழுப்பி ஒரு முழுவடிவம் பெறுமாறு செய்ததுடன், படிகளைத் திருத்தும் பணியையும் மேற்கொண்டவர்கள் இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ந. சிவராசன், முனைவர் ம. ரா. போ. குருசாமி (கோவை, பொறியாளர் C. P. கெளரிசங்கர், திரு. ச. மார்க்கண்டு என்போர் ஆவர். முனைவர் இந்திராணி மணியம் அவர்களும் படிதிருத்தும் பணியில் பங்கேற்றார். இவர்கள் அனைவருக்கும் மணிவாசகப் பெருமான் இன்னருளைப் பொழிந்து வாழ்த்துமாறு அப்பெருமானின் திருவடிகளை இறைஞ்சுகின்றேன். - இந்த நூலுக்குச் 'சிவனடிக்கீழ் செல்லும் மணிவாசகரை சிறந்த முறையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் திரு. பத்மவாசன் அவர்கள். தெய்வப் படங்கள் தீட்டுவதில் ஈடிணையற்று விளங்கும் ஒவியர் திரு. பத்மவாசனுக்கு மணிவாசகப் பெருமான் திருவருள் பொழிவதாக என அப்பெருமானின் திருவடிகளை இறைஞ்சுகிறேன். வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த சிவசக்தி இணினி அச்சுக்கோப்பாளர்களுக்கும் மணிவாசகரின் இன்னருள் பாலிப்பதாக. சிறப்பாக நூலை வெளியிட்ட கங்கை புத்தக நிலைய’ உரிமையாளர் திரு. திருநாவு இராமநாதன் அவர்களுக்கும் மணிவாசகரின் நல்லருள் கிட்டுவதாக, சென்னை-83 அ. ச. ஞானசம்பந்தன் மார்ச், 2001