இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவமயம்
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
-
கணபதி துதி.
சுந்தரனாம் தென்விரிஞ்சைத் தோகைமயில் வாகனன்மேற்
சந்தமுறும் பிள்ளைத் தமிழ்பாடச் செந்மிதழ்சேர்
வாக்கெனக்கு நல்கி மதமா முகக்கடவுள்
ஊக்கமுடன் காப்பான் உவந்து
பருவத்தொகை.
திருவருள்
சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
வம்புலியே சிற்றிலே யாய்ந்த சிறுபறையே
பம்புசிறு தேரோடும் பத்து.
காப்புப் பருவம்
திருக்கஞ்ச விருகரத்தி னபயவர தமுஞ்சேர்
- திகழுமர கதமளித்த தெய்வசிகா மணியை
யருக்கன்சந் திரன்றவழும் புரிசைவிரிஞ் சையில்வா
- ழாறுமுகத் தரசையெமை யாண்டவனப் புரக்கப்
பெருக்கஞ்சந் தததும்மேவுஞ் சிவநாத னிடத்திற்
- பிறந்தவொரு சிறுபாலன் பெருங்கானி பெறவே
யிருக்கஞ்சன் முதலமரர் அரகரவென் றேத்த
- விளைத்தபிறை குடுமுடி வளைத்ததிரு வருளே. ()