149 ல் பொழிப்புரை - த.கோவேந்தன்
அத்தகைய தன்நிகரில்லாத புலமையுடைய பெரியாழ்வார் அருளிய பெரு மகளே, ஆண்டாளே சிறுசோறு சமைத்து விளையாடு!
- தென்னரங்கன் முதல் ஐவரும் விருந்து உண்பதற்காகச் சிறு சோறு சமைத்து விளையாடு!
பறவைமா மீனம்ஊர் வனதாவரங்கன்முப் பானுடன் பன்னொன்றின் மேல் பத்திரட் டியமக்கள் தேவர்ஒன் பானொடும்
பதினான்குள் தைக்க தாம்
உறவுகொண்டு எண்பத்து நான்குநூறாயிரம்
யோனியில் குடிபுக்க வாம்
உயிர்கட்கு வேறுவேறு உணர்வொடு பெருஞ்சோறும்
உற்றிழைத்து அருள்புரியும் நீ
நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
நரலையுள் தரளம்உலை நீர்
நன்புனற் கடல்நேமி வரைமிடா, உலைமுகம்
நயந்தது.அழல் ஞாயிறா கச்
சிறகர்வண்டு இமிழ்பொழில் புதுவைப் பிராட்டியே!
சிறுசோறு இழைத் தருள்கவே!
தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்துணச்
சிறுசோறு இழைத் தருள்கவே! (92)
பறவைகள், விலங்குகள், மீன் முதலிய நீர்வாழ்வன, ஊர்வன, செடி கொடி மரம் இவற்றுள் பறவை, விலங்கு, நீர் வாழ்வன. ஒவ்வொன்றும் பத்துப் பத்து நூறாயிரம் வகையாம். ஊர்வன பதினொரு நூறாயிரம் வகை செடி கொடி மரங்கள் இருபது நூறாயிரம் வகை மக்கள் வகை ஒன் பது நூறாயிரம், தேவர் வகை பதினான்கு நூறாயிரம். இவ்வாறு பல்வகை கருவா (யோனி)யில் பிறந்த உயிர்கள் மொத்தம் 84 நூறாயிரம் ஆகும்.
இந்த உயிர்கட்கெல்லாம் அவ்வவற்றுக் கேற்றபடி வேறு வேறு உணர்வுகளும் உணவுகளும் பொருத்தமாகச் சமைத்து அருள்புரியும் அன்னை நீ தேன், தயிர், நெய், கரும்பு, பால் முதலிய கடல்கள் நீ சமைக்கும் கறியாகும். சோறு, கடலில் பிறந்த முத்துகளாம். உலையாக ஊற்றும் நீர் நல்ல நீரையுடைய கடல்வட்டம், மலைகளே பானைகள். உலையிடத்து விரும்பிய நெருப்பு செங்கதிர்