பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

திருவிளையாடற்புராணம்

கொண்டிருந்தனர். அவளால் அதை நம்பவே முடிய வில்லை. கணவர் வந்ததும் உண்மைதானா என்று கேட்டு வினவினாள்.

"யான் ஒரு பாவமும் அறியேன்; கோயிலுக்குச் சென்று இருந்தேன்" என்றார்.

சுற்றியிருந்த மாணவரும் பொதுமக்களும் அவர் அவன் செய்த தீமையைச் சொல்லிச் சொல்லி ஊறு விளை வித்ததாகச் சொன்னார்கள். வந்தவர் இறைவனே என்பது அறிந்து நிறை உள்ளத்தோடு திருக்கோயில் சென்று அனைவரும் வழிபட்டனர். நாட்டு அரசன் குலோத்துங்கனும் இதுகேட்டு வியப்பு அடைந்து அவனும் கோயிலை அடைந்து வழிபட்டான். அவன் ஆட்சியில் இறைவன் மற்றவர்கள் குறைகளைத் தீர்த்து வைத்து உதவுவது கண்டு உவகை அடைந்தான் ஆணை என்பது அரசனது மட்டும் அன்று; அதையும் கடந்து இறைவனது ஆணை தான் உலகத்தில் தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்டச் செய்கின்றன என்பது உணர்த்தப்பட்டது. 

28. நாகம் எய்த படலம்

குலோத்துங்கனுக்குப்பின் அவன் மகன் அனந்த குண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனும் முன்னையோரைப் போலச் சைவம் தழைக்கக்கோயிற் பணிகளும் சாத்திரப் பிரச்சாரமும் செய்து வந்தான். மக்கள் சைவ சமயத்தைப் பின் பற்றினர். அதனால் அழுக்காறு கொண்ட சமணர் அவனை ஒழிக்க வேள்வித் தீ ஒன்று