184
184
ருலகிலிருக்கும் பாரிசாதமரத்தை இப்பூவுலகில்கொண்டு வந்து நட்ட பெருமையைப் பேசுகின்ருர். பின் னிரண்டு அடிகளில் யமகம்" என்ற சொல்லணி அமைந்து பாடலை அழகுறச் செய்கின்றது.
திருவேங்கடத்தின் சிறப்பு:
இந்த நூலில் திருவேங்கடமலையின் சிறப்பு பாடல் தோறும் முதல் இரண்டு அடிகளில் பலவாருகப் பேசப் பெறுகின்றதைக் காண்போம்.
முதலாவதாக நான்முகன், சிவபெருமான், இந்திரன் முருகன், ஆதிசேடன் ஆகிய கடவுளருடன் வேங்கடமலை ஒப்பிட்டுப் பேசப்பெறுகின்றது.
'நாலு திசைமுகமும் கண்ணுதலால் ஒண்கமலம்
மேலுறலால் வேதாவாம் வேங்கடமே."
(நண்ணுதல்-பொருந்தியிருத்தல்; விரும்பி வருதல்; மேல் உறல் - தோன்றுதல், தன்மேல் தங்கப் பெறுதல்; வேதா - பிரமன்.) என்ற வரிகளில் நான்முகன் வேங்கடத்துடன் ஒப்பிடப் பெறுகின்ருன். இவ்வாறு ஒப்பிடப் பெறுதலைச் செம் மொழிச் சிலேடைபற்றி வந்த உவமையணி’ எனக் கூறுவர் அணியிலக்கண நூலார். இவ்வாறே,
60. யமகமாவது-அடி முதலெழுத்தோடு இரண் டெழுத்து முதல் பத்தெழுத்து சருகி ஓர்டிபோலப் பல அடிகள் பாடப் பெறுவது. ஈண்டு எழுத்துக் கணக்கு ஒற்ருெழித்துப் பார்க்க வேண்டும். யமகத்தைத் தமிழில் மடக்கு என்று வழங்குவர்.
61. பாடல் - 4
62. செந்மொழிச் சிலேடையாவது சொற்கள் வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்பெருமல் பொருள்படுவது. -