பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225


225 வந்து கூடுவன்" என்று குறிசொல்லி தலைவியை மகிழ் விக்கின்ருள் குறத்தி யொருத்தி. மறம்: தமது மகளே மணம் பேசும்படி அரசரால் அனுப்பப் பெற்ற துாதனை நோக்கி, மறவர்கள் மணம் மறுத்து அவ்வரசரை இகழ்ந்து பேசினதாகச் செய்யுள் செய்வது, மறம்’ என்ற கலம்பக உறுப்புக்கு இலக்கண மாகும், . "மறவர் கொம்பை வினவ வந்த இறைவர் தூத கேளடா வடமலைக்குள் கின்ற மாயர் . தடம லர்க்கண் அருளினல் விறல்பொருந்தும் எங்கள் கொம்பு வீறும் உங்கள் ஆனையின் வெண்மை பெற்ற கொம்பு போல விற்ப தோவ ரைந்திடும் திறன டைந்த கொம்பு போல விதியி னெவ்வினத்தையும் சேருமோசு வர்க்க லோக தாரு விட்ட கொம்பு போல் அறமி குந்த சுடர்தொடப்பொ -- றுக்கு மோசொல் அரசர்பால் ஆன கொம்பு தண்டி கைக்க மைந்த கொம்பு சரதமே." |கொம்பு-கொம்பு போன்றவள்; இறைவர்-அரசர், வடமலே-திருவேங்கடம்; மாயர்-எம்பெருமான்; விறல் 194. பாசுரம்.27. . வேங்.-15