பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


46 1உருளிய தடையின்றிச் செல்ல; குறைத்த போழ்ந்து வழியாக்கின; அறை-பாறை) என்ற அகப் பாட்டடிகள் கவிதை நயம் தோன்ற இப் பகுதியினை வருணிக்கின்றன. காய்கதிர்ச் செல்வகிைய திகிரி தான் செல்வதற்கு வழியமைக்கும் பொருட்டு பனியையுடைய சிகரங்களைத் தலை துணித்து விட்ட தாகக் கூறப்பெறுகின்றது. இன்னும் இரண்டு பாடல் கள் இப் பகுதியை, 'வெம்முனே அருஞ்சுரம்’ ’ என்றும், 'அருஞ்சுரக் கவலை' என்றும் குறிப்பிடுகின்றன. இப் பகுதியினைப் பற்றிக் கூறும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகைப் பாடல்கள் யாவும் பாலைத் திணை பற்றி யனவாகவே இருத்தல் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. இவை ஏதோ ஒரு முறையில் பாலைக் கூறுகளில் ஒன்றி னேக் குறிப்பிடுவனவாகவே உள்ளன. இந்த வேங்கடப் பகுதியில் செழிப்பான இடங்களே இல்லை என்றும் கூற முடியாது. புறநானூற்றுப் பாட லொன்றில் கல்லாடனர் என்ற புலவர், 'தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும் விண்டு வனைய விண்தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த கெல்லின்...... வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென' (எழிலி-முகில்கள்; இசைக்கும் முழங்கும்; விண்டு. மலை; பிறங்கல்-குவியல்) . என்ற அடிகளால் வானம் பொய்க்காது மழை பொழித லால் மலேபோன்ற நெற்குவியலை விளைத்த வேங்கடத் 69. அகம்:265, 10. அகம்-359. 71. புறம்-391.