பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


61 இப் பாடலில் இளங்கிரி என்ற சொல், சிறுமலை’ என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளது என்றும், இது பல நூற்ருண்டுகளில், தொல்காப்பியர் காலத்திலிருந்து முதலாழ்வாழ்வாரில் ஒருவராகிய பூதத்தாழ்வார் காலம் வரையில் உள்ள காலப்பகுதியில், நிலவியல் கூறுகளின் அடிப்படையில், இம்மலேகட்கு ஏற்பட்ட மாற்றத்துக்கு ஒரு சான்ருக அமைகின்றது என்றும் விளக்குவர். மேலும் அவர் கூறுவது வேங்கடம்’ என்று வழங்கும் இப்பகுதியில் இப்பொழுதும்கூட மலைகளின் பல்வேறு அழிவு மாற்றங்களைக் காணலாம். கோடைக் காலக் கதிரவனின் கடும் வெப்பமும் மாரிக்காலத்தில் பெய்யும் மழையும் இப்பகுதியிலுள்ள சில பாறைகளைப் பெரும் பெரும் பாறைகளாகப் பிளவுபடச் செய்துள்ளன; சில பாறைகளைச் சில கூரிய கற்குவியல்களாகவும் கூழாங்கற்களாகவும் சிதைத்துள்ளன; இ ன் னும் சிலவற்றை மணலும் மண்ணும் கலந்த மேடுக ளாகவும் மாற்றம் அடையும்படி செய்துவிட்டன. இதல்ை, இம் மலேப் பகுதியில் தாவரங்கள் தலைகாட்டுவ தற்கு வாய்ப்பும் நேரிட்டது. ஒருகாலத்தில் வழுக்கைப் பாறைகளாக இருந்தவற்றில் பசுமையும் செழுமையும் தலைகாட்டத் தொடங்கியது. இப்பொழுது இம்மலையில் சிறு புல்பூண்டுகள், அடர்ந்த காடுகள் என்ற பல்வேறு நிலைத்தாவரங்களைக் காணலாம். இங்கனம் இம் மலே பூதத்தாழ்வார். காலத்தில் பல்வேறு மாற் றங்கள் அடைந்து மக்கள் வசிப்பதற்கேற்ற நிலை யையும் அடைந்துவிட்டது. அதல்ை அவர் இம்மலையைக் குறிக்க இளங்கிரி என்ற சொல்லை ஆண்டுள்ளார்” என்பது. இந்த ஆழ்வாரின் இன்னொரு பாடலைக் காட்டி அதில் கோயிலைப் பற்றிய குறிப்பு வருகின்றது என்றும் கூறுவர். அவர் காட்டும் பாடல்: