பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


6? என்ற நூலால் அறிகின்ருேம். இராமாநுசர் திருவேங்கட முடையானுக்குக் கைங்கரியம் செய்யும் அர்ச்சகர்கட்குக் குடியிருப்புவசதிகள், பிறவசதிகள் இவற்றைச்செய்தார். தம் தாய் மாமனகிய திருமலை நம்பியையே இவற்றை யெல்லாம் கண்காணிக்கும் மேலாளராகவும் நியமனம் செய்தார். இராமாநுசருடைய சமூகச் சீர்திருத்தமும் அவருடைய தத்துவஞானமும் பாமரமக்கள் மனத்தை யும் கவர்ந்தன. அவருடைய வடமொழி அறிவு அவருக் குப் பலவகையில் கைகொடுத்து உதவியது. அவருடைய கீதைப் பேருரையும் பிரம்மசூத்திரப் பேருரையும்அவரை வடநாட்டினருக்கும் அறிமுகம் செய்து வைத்தன. இதல்ை இராமாநுசரின் புகழ் நாட்டின் நாலாபுறங் களிலும் பரவியது. இதல்ை அவர் மிகநெருங்கிய உறவு டன் கைங்கரியம் செய்துவந்த திருவேங்கடமுடை. யானின் பெருமையும் சிறப்பும் எங்கும் பரவி திருவேங் கடத்திற்கும் ஒருமுக்கியத்துவம் ஏற்படலாயிற்று. இவற் றைத் தவிர சைவ-வைணவ வாக்குவாதம் பற்றிய வரலாறும் திருமலேயின் புகழ் எங்கும் பரவக் காரணமாக இருந்தது. இதுபற்றிய வரலாறு சுமார் 700 ஆண்டுகட்கு முன்பிருந்த பின்பழகிய பெருமாள் சீயர் அருளிய ஆரு பிரப்படிக் குருபரம்பரையிலும், இராமாதுசாசாரியரின் திவ்விய சரிதையிலும் காணலாம். சைவ-வைணவ வாதத்திற்குக் காரணமாக இருந்தது பேயாழ்வாரின் பாடல். 'தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ்அரவும் பொன்காணும் தோன்றுமால்-சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு