132
132
கண்பரின் கோய்க்கு மருந்து காண விரும்பினர் திரு.வி.க. பெண் துன்பம் நீங்குதல் வேண்டும்; உமது கவலையும் தீர்தல் வேண்டும். அதற்கு வழி ஒன்றே, பெண்ணுக்கு மறுமணம் செய்வது நல்லது என்றார் திரு.வி.க.
“சமூகம் இடம் தராதே’ என்றார் கண்பர்.
“இடம் தரும் சமூகத்துக்கு அவளை அனுப்பு வீரோ?’ என்று கேட்டார் திரு.வி.க.
பெண்ணின் மனத்தை அறிதல் வேண்டும்’ என்றார் கண்பர். அது அவரால் இயலவில்லை.
திரு.வி.க. என் செய்தார்? ஒரு பெண்மணியை அனுப்பினுர், அவர் கிறிஸ்தவப்பெண்மணி. கண்பரின் மகளுக்கு பைபிள் போதித்தாள். அப் பெண்மணி, கிறிஸ்தவ சங்கத்தில் சேர்ந்தாள். நன்றாகப் படித்தாள். ஆசிரியத் தொழில் ஏற்றாள். மறுமணத்தில் அவள் மனம் செல்லவில்லை. அவளது துன்பம் தீர்ந்தது. தந்தையின் கவலையும் தீர்ந்தது.
கடற்கரையிலே அரசியல் கூட்டங்கள் நடை பெறும். விடுதலை பற்றி முழங்குவர். பின்னே கூட்டம் கஜலயும், கலந்த கூட்டம பஸ் கிலேயங்கள் கோக்கும். கிழவரும் மெல்லியரும் பஸ் கிலேயங்களை அனுக இய லாது தவிப்பர். இளைஞர் சிலர் பெண்களின் கிலே கண்டு இரங்குவர். பெண்களுக்கு உதவி செய்வர். இவ் விளேஞர் சிலரோடு திரு.வி.கவும் கலந்து கொள்வார்.
திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகளின் பேச்சுக் கேட்கப் பெருங்கூட்டம் திரளும். பேச்சு முடியும்வரை அமைதியாகக் கேட்கும். பேச்சு முடிந்த பின் பரபரப்புடன் பஸ்கோக்கி ஓடும். அடியவர் கூட்டம