திரு. வி. க. இ. 181
இவ்வாறு ஒரு கருத்தை இத்தகைய ஒரு நடையில் எழுதிய அதே திரு.வி.கதான் பின்னர் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகர் பெருமானின் மந்திரத்தால் கட்டுண்டு அதனைத் தமிழகமெங்கும் பரப்பி வந்தார். 1917-18ஆம் ஆண்டுகளில் திரு.வி.க.வின் நடை இன்று நம்மில் பலருங் கைக்கொள்ளும் நடையாகவே இருந்து வந்தது.
மோட்சானந்தத்தைக் குறித்து ஞானராய்ச்சி செய்யும் வேதாந்திகளும் சுய ஆட்சி முறையில் தலைப்பட்டு உரைத்தல் வேண்டும் 7-3-1918)
ஒவ்வொரு சமயத்தவரும் அவதாரமூர்த்தி தோன்றுவதில் நம்பிக்கை உடையவராய் இருக்கின்றனர் (16–8–1918).
‘நமது பாரதத்தில் பயங்கரமான சண்டைகள் பல நடந்திருக்கின்றன.’
‘பிரஸிடென்ட் வில்சனுக்கு உயர்ந்த வேதாந்த ஞானம் பிறந்திருக்கிறது (13-12-1918).
அவர்கள் ஜபதபங்களைச் செய்து கொண்டிருப் பார்கள்.’
மேல்நாட்டு நாகரிகம் பரவாத - இங்கிலீஷ் பாஷை மணம் வீசாத-கிராமங்கள் இன்னுஞ் சில இருக்கின்றன (6-11-1918).
ஒரு சிற்ப சாஸ்திரி ஹிந்து தேவாலயத்துள்ளே நுழைந்து பிராகாரத்தைச் சுற்றிவருவானாயின் அவன் உள்ளமும் சிற்பத்தின் இயல்பும் ஒன்றுபட்டுவிடும்:
‘ஹிந்து தேவாலயங்களிலுள்ள அபிஷேகத் திரவியங்கள் முக்கிற்கு இன்பமூட்டும்: - ‘அடியார்களை ஆலிங்கனம் செய்வதனாலும் கைத் தொண்டு செய்வதனாலும், மணி ஒலியும் தீபாராதனை ஒளியும் முறையே செவிப்புலனிலும்