பக்கம்:திரு அம்மானை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காதல் அநுபவம் -137 ஊடுவேன்; செவ்வாய்க்கு உருகுவேன். “என்னுடைய உள்ளம் உருகும்; உடல் உருகும். அவனுடைய திருவடியையே எண்ணியிருப்பேன். இந்த ஊடல் நீட்டிக்காதபடி நாமே மனம் குழைந்து சிவன் - அடியில் விழுந்து பணியலாமா என்று எண்ணமிடுவேன்." - உள் உருகித் தேடுவேன்; தேடிச் சிவன் அடியே சிந்திப்பேன்... "அவன்பால் நான் கொண்ட காதல் புறத்தில் உள்ள தழுவுதல் முதலிய செய்கைகளோடு அமைந்தது அன்று. அவனை என் உள்ளத்தை புதைத்து வைத்திருக்கிறேன். - ஆதலால் அங்கே அவன் திருவுருவத்தைத் தேடிச் சிந்தித்து, - அவன் திவ்ய தரிசனத்தை உள் முகமாகப் பார்த்து இன்புறுவேன்." "அதிசயமான காதலாக இருக்கிறதே!" என்கிறாள் (தோழி. “ஆம். இது அப்பிராகிருதமான காதல். உலகியலின் தொடர்பே இதற்கு இல்லை. இறைவன் எங்கே என்னைப் - புறக்கணித்து விடுவானோ என்ற ஐயம் எழும். அன்பும் பற்றும் கொண்ட ஒரு பொருள் கையில் இருந்தாலும் அது எங்கே நழுவி விடுமோ என்று ஐயுற்று அஞ்சுவது அந்த அன்பின் இயல்பு. ஆகவே அந்த எண்ணம் வரும்போது நான் வாடுவேன்." - வாடுவேன். "இறைவனிடத்தில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. தன்னை நம்பினவரை அவன் 'கைவிடமாட்டான். - தன்னைத் தழுவ இடம் கொடுத்தவன் என் அன்பின் -ஆற்றலை உணர்வதற்காகச் சிறிதே 'கைவிடுபவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/151&oldid=1418549" இலிருந்து மீள்விக்கப்பட்டது