பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 155

பணம் கேட்டார். சுயமரியாதையை மறந்து. "வள்ளலோ பணம் இல்லை என்ற சொல்லாமல் இன்று போய் நாளை வா என்று இழுத்தடித்துச் சோர்வடையச் செய்தார். கடைசியில் பணம் கிடைக்கவில்லை; திருமணம் எளிய முறையில் நடந்தேறியது.

இத்தகைய சூழலில் - நடிகர்களுக்கும் விந்தனுக்கும் நீண்ட இடைவெளி உண்டான காலத்தில் பழம்பெரு நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி எம்.கே.டி. பாகவதர் கதை' என்ற தொடரை எழுத ஆரம்பித்தார் விந்தன்.

அதுவரையில் கதைகள் மட்டுமே எழுதி வந்த விந்தனுக்கு ஒருவரைப் பற்றி வரலாறு எழுதுவது அதுவும் ஒரு நடிகரைப் பற்றி எழுதுவது புதிய அனுபவமாகும். அந்தப் புதிய அனுபவமும் விந்தனுக்குச் சிறப்பாகவே அமைந்தது.

தம் இனிய குரலில் தமிழக மக்களைத் தம் வசப்படுத்திக் கொண்டிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை, அதுவும் இறுதி வாழ்க்கை சோக வரலாறாகும். எம்.கே.டி. பாகவதரின் கதையை விந்தன் தொடங்குவதைப் பார்ப்போம்.

★ 大 大