இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54 மு. பரமசிவம் :
இச் சமயத்தில்தான் 'இவள் யார் அக்கா!' என்ற குரல் கீதாவின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்கிறாள். அவள் அழகில் சொக்கிய ராஜா அங்கே நின்றான்.
நிர்மலாவின் பாடு தர்மசங்கடமாகப் போய் விடுகிறது. நிலைமையைச் சமாளிக்க அவள் வேலைக்காரி ராஜா' என்று சொல்லி விடுகிறாள்.
அந்த அப்பாவி அத்துடன் விட்டானா என்றால் அதுதான் இல்லை! தன்னை மனிதனாக்கிய சூழ் நிலையைக்கூட மறந்து, கீதாவின் மேல் மையல் கொண்டுவிட்டான். பரிதாபம்.
இந்தக் காதல் பழமைப்பெண்ணான கீதாவை மட்டும் சோதிக்கவில்லை; புதுமைப்பெண்ணான சுமதியையும் சோதித்தது. அன்புள்ளங்கொண்ட இருவருக்கும் இதனால் எத்தனைத் துன்பங்கள்.
அப்பப்பா! அதற்குமேல் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! பார்த்துத்தான் தெரிந்து கொள்ளுங்களேன்.
யார் வாழப்பிறந்தவள்?
女 ★ ★