பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 அவர்கள் இடும் சுவையற்ற உணவு எரிச்சலைத் தரும் அவர் சாபமிட்டு அவர்களை எரிப்பார் என்று எதிர்பார்த்தான். அவன் திட்டம் தோல்வி அடைந்தது. அவர்களை அவர் வாழ்த்தி ஆசி கூறினார். செவியிற் சுவை உணராத மக்களே வாய்ச்சுவைக்கு வாடிக் கிடப்பர் என்ற உண்மை அங்கு நிலைநாட்டப்பட்டது. நச்சுப்பொய்கை 10 நச்சுப் பொய்கை என்று தெரியாமல் நச்சி அதன் நீரைத் தருமன் தம்பியர் நால்வரும் பருகினர். அவர்கள் மயக்கம் உற்று உயிர் இழக்கும் நிலையில் கீழே கிடந்தனர்;