பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மேற்கொண்ட பொறியியல் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இத் தில்லைப் பெருங்கோயில் விளங்குவதனை நன்குணர்வர். இவ்வாறு தமிழகத்தின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, நாட்டியக் கலை, இசைக்கலை, ஓவியக்கலை முதலிய கலைகள் பலவற்றின் வளர்ச்சிக்கும் நிலைக்களமாக அமைந்த தில்லைப் பெருங்கோயிலின் கலைநயங்களைப் பேணிப்பாதுகாத்தல் தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உரிய தலையாய கடமையாகும்.