6
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
பரசுராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெருநோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசுராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்பு கார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்து மாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற்கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று.1 அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசுராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதை யறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்ட கன்றனர். பரசுராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது.2 பிற்றைநாளில், அப்பரசுராமர் இராமபிரான் திருமணஞ்செய்து கொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற் கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத் தால் அறியக் கிடக்கின்றது.
இனி, இராமயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலையமலையிலிருந்த அகத்தியமா முனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின் கண் அசைந்து கொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன்; அக்காரணம்
1. மணிமேகலை - சிறைசெய்காதை 25-40
2.
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங்
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் றனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை'
- மணிமேகலை - பதிகம் 9-12.