பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1






தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி.பி. 972-முதல் 989-வரை இஃது உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப் பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும் படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திர சோழனை அவ்வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித் தனையும் சிறைபிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமாநகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.

1

1

பிறகு, முதலாம் இராசராசசோழன் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்ததோடு வேங்கி நாட்டை யாட்சிபுரியும் உரிமையும் அளித்து அந்நாட்டிற்கு அவனை திரும்ப அனுப்பினான். விமலா தித்தனும் அந்நாட்டைக் கி.பி. 1015-முதல் 1022-வரை அரசாண்டான். அவனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இருமக்கள் இருந்தனர். அவர்களுள் இராசராசநரேந்திரன் என்பவனே விமலாதித்தன் இறந்த பின்னர்க் கி.பி. 1022-ல் முடிசூட்டப் பெற்றான். முதலாம் இராசராசசோழனது மகனாகிய முதலாம் இராசேந்திர சோழன் தன் மகள் அம்மங்கைதேவியைத் தன் உடன் பிறந்தாளது மகனும் வேங்கிநாட்டு வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுக்கு மணம்புரிவித்தான். மணமக்கள் இருவரும் வேங்கிநாட்டில் வாழ்ந்துவந்தனர்.

அந்நாளில் பட்டத்தரசியாகிய அம்மங்கைதேவி கருப்ப முற்றுத் தன் பிறந்தகமாகிய கங்கைகொண்ட சோழபுரஞ் சென்று அங்குக் கி.பி. 1044-ஆம் ஆண்டில் பூசநாளில் ஒரு தவப்புதல்வனைப் பெற்றாள்.2 திருமகன் பிறந்த நாளிலே நன்னிமித்தங்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்ட நகரமாந்தர் எல்லோரும் இறும்பூதுற்று, முன்னாளில் இலங்கையை யழித்துப் பின்னாளில் பாரதப் போர் முடித்த திருமாலே இப்புவியின்கண்

1. Mysore Gazetteer Vol. II, Page 947.

2. S.I.I.i Vol. Vi. No. 167.