பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1






தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

3. வேங்கிநாட்டில் குலோத்துங்கன்

முடிசூடுதல்

நம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கிநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக்கொண்டிருக்கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங் கவலை யுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டை யடைந்தான்; அங்குப் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண்டனாயமர்ந்து வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062 ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.1 தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான் மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான் பின்னர், அமைச்சரும் சுற்றத் தினரும் அவனுக்கு முடிசூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத் தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களைவென்று தம்மடிப் படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர்.

1. S.I.I.Vol.I.No.39.